search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் முற்றுகை"

    • போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை
    • நீர்வழிப் பாதையை பொதுப்பணித் துறையுடன் இணைந்து அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

    மேட்டுப்பாளையம்,

    அன்னூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவுள்ள குளம் உள்ளது. இந்தக் குளம் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் இணைக்கப்பட்டு, தற்போது சோதனை ஓட்டமாக குளத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், அன்னூர் சுற்றுவட்டரப் பகுதியில் பெய்து வரும் மழையால் குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அன்னூர் சுற்றுவட்டாரத்தில் பெய்த பலத்த மழையால் குடியிருப்புகள், விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்தது.

    பல இடங்களில் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால மழைநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில், நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். தகவல் அறிந்து வந்த தாசில்தார் காந்திமதி, பேரூராட்சித் தலைவர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது, பொதுமக்கள் கூறியதாவது:-

    பொதுப்பணித் துறைக்கு சொந்தமான குளம் நிரம்பும் நிலையில் உள்ளது. ஒரு நாள் பெய்த மழைக்கே குடியிருப்புப் பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. மீண்டும் கனமழை பெய்தால் குளம் நிரம்பி குடியிருப்புகளை மழைநீர் சூழ வாய்ப்புள்ளது.

    எனவே, அன்னூர் குளத்தில் இருந்து குன்னத்தூராம்பாளையம் குளத்துக்கு செல்லும் நீர்வழிப் பாதையை அளவீடு செய்து, நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குன்னத்தூராம் பாளையம் குளத்துக்கு தடையின்றி மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    நீர்வழிப் பாதையை பொதுப்பணித் துறையுடன் இணைந்து அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் காந்திமதி உறுதி அளித்ததையடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • குடியிருப்பு பகுதி சாலை ஆக்கிரமிப்பு
    • தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பெரிய அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தேன்ம லைபட்டி கிராமத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் தனியார் நிலத்தின் மூலம் சென்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஏரிக்கரை மேல் சாலையை அமைத்து அந்த பாதையை கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த தனிநபர் சிலர் ஏரிக்கரை திடீரென பள்ளம் தோண்டி சாலையை ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளதாக கூறப்படுகின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் வழியில்லாமல் செல்ல முடியவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி 50-க்கும் மேற்பட்டோர் ஆரணி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை யிட்டு தாசில்தார் மஞ்சுளா விடம் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யபட்ட சாலையை மீட்டு தர கோரி புகார் மனு அளித்தனர்.

    புகார பெற்று கொண்ட தாசில்தார் மஞ்சுளா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வலியுறுத்தினர்
    • மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி, ஏரியூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இன்று மாலை ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு அப்பகுதி மக்கள் போலீஸ் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    அதன்படி ஏரியூர் கிராமத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடன நிகழ்ச்சி நடத்திக் கொள்ள தமிழ்நாடு போலீஸ்துறை இயக்குனரின் சுற்றறிக்கை படி வாணியம்பாடி டி.எஸ்.பி. விஜயகுமார் அனுமதி வழங்கினர்.

    நடன நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கிராம மக்கள் ஒன்று கூடி விறுவிறுப்பாக செய்தனர்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் நடன நாட்டிய நிகழ்ச்சி நடத்த கூடாது என நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இதனையடுத்து போலீசார் ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடத்த தடை செய்யப் போவதாக அறிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று கூடி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் திரண்டனர். மேலும் ஆடல் பாடல் நடன நிகழ்ச்சியை நிறுத்தக்கூடாது. தொடர்ந்து நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களிடம் சமரசம் பேசின ர். மேலும் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • 50-க்கும் மேற்பட்டோர் திருத்தணி நகராட்சி அலுவலகத்திற்கு வந்த நிலையில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    • சீரான குடிநீர் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

    திருத்தணி:

    சீரான குடிநீர் வழங்க கோரி திருத்தணி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

    திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் தெருக்குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.

    திருத்தணி அரக்கோணம் சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறையினர் பள்ளம் தோண்டியபோது இந்திரா நகர் பகுதிக்கு குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நகராட்சி நிர்வாகம் கடந்த மூன்று மாதங்களாக இந்திரா நகருக்கு டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இந்திரா நகர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திருத்தணி நகராட்சி அலுவலகத்திற்கு வந்த நிலையில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    கடந்த ஆறு மாதமாக சீரான குடிநீர் விநியோகம் செய்யாததால் எங்கள் பகுதி மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். டிராக்டரில் வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை.

    மேலும் தெருக்குழாயில் வரும் தண்ணீர் சுத்தமானதாக இல்லாமல், மாசு கலந்து வருவதால் உபயோகப்படுத்த முடியவில்லை. எனவே சீரான குடிநீர் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து திருத்தணி நகராட்சி ஆணையர் அருள் நேரில் வந்து பொதுமக்களிடம் 2 நாட்களுக்குள் சீரான குடிநீர் வழங்குவதாக உறுதி கூறினார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 4 அடி அகலத்தில் 150 அடி நீளத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
    • இந்த தடுப்பணை கடந்த சில மாதங்களாக கட்டப் பட்டு வந்தாலும், தரம் இல்லாமல் கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 4 அடி அகலத்தில் 150 அடி நீளத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணை கடந்த சில மாதங்களாக கட்டப் பட்டு வந்தாலும், தரம் இல்லாமல் கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக ஒப்பந்ததாரரிடம் முறையிட்ட மக்கள், தடுப்பணையை தரமானதாக கட்டும்படி வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பணை கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்த கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது தடுப்பணையை தரமான தாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத் தினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    அதன்பிறகு பொது மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
    • பொதுமக்கள் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவிடம் புகார் மனு அளித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த புதுவாயல், வில்லியர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் வில்லியர் காலனி அருகே உள்ள நிலத்தில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அவர்கள் கூறுகையில், 'செல்போன் டவர் அமைப்பதால், வில்லியர் காலனியில் இருந்து வெளியேறும் மழை நீர் கால்வாய் அடைபட்டு விட்டது. மேலும் இந்த செல்போன் டவர் விதிமுறைகளை பின்பற்றாமல், அதை சுற்றி போதுமான இடைவெளிவிடாமல் கிராமத்தில் உள்ளவர்களுக்கு பிரச்சனை விளைவிக்கும் வகையில் நிறுவப்படுகிறது.

    இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருவதால் செல்போனால் ஏற்படும் கதிர்வீச்சுக்கு ஆளாகி உடல் உபாதைகள் ஏற்படுகிறது' என்று குற்றம்சாட்டினார்கள்.

    இந்த நிலையில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் பொதுமக்கள் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவிடம் புகார் மனு அளித்தனர்.

    • தருமபுரி எஸ்.வி. சாலையில் உள்ள மாவட்ட பத்திரவு பதிவு அலுவலகம் முன்பு திடீரென்று திரண்டு வந்தனர்.
    • அனைவரும் அலுவலகத்திற்குள் புகுந்து தங்களுக்கு பட்டா உடனடியாக வழங்க வேண்டும் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதியில் விநாயக சிவசுப்ரமணியம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சுற்றி சுமார் 350 குடும்பத்தினர் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர்.

    நீண்ட காலமாக அந்த பகுதியில் வாழ்ந்து வந்த அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் விநாயக சிவசுப்ரமணியம் கோவிலை சுற்றியுள்ள நிலங்கள் அறநிலையத்திற்கு சொந்தமானது என்றும்,

    எனவே இந்த நிலங்களை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.இந்த நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தும் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

    அந்த மனுமீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், காலம் காலமாக நாங்கள் இந்த பகுதியில் வசித்து வருகிறோம், எனவே எங்களுக்கு உரிய பட்டா வழங்க வேண்டும் என்றும் கலெக்டரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களும் எதிர் மனு கொடுத்தனர்.

    இருதரப்பினரின் மனுக்களையும் பரிசீலித்து 350 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    இதுதொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பட்டா கேட்டு வந்தனர்.

    ஆனால், அதிகாரிகள் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியும், அப்பகுதி பொதுமக்களை அலைகழித்தும் வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று தருமபுரி எஸ்.வி. சாலையில் உள்ள மாவட்ட பத்திரவு பதிவு அலுவலகம் முன்பு திடீரென்று திரண்டு வந்தனர்.

    அப்போது அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள் அனைவரும் அலுவலகத்திற்குள் புகுந்து தங்களுக்கு பட்டா உடனடியாக வழங்க வேண்டும் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி டவுன் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் வேறு ஏதும் நடைபெறாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குறைந்த அளவிலேயே தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்

    குடிநீர் வினியோகம் செய்வதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் 22-வது வார்டு பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் இருந்து வருகிறார்.

    -இந்தநிலையில் 22-வது வார்டு பகுதியான பெருமாள் லேஅவுட், சாமப்பா லே அவுட், சுமா லேஅவுட் போன்ற பகுதியில் கடந்த 6 மாதங்களாகவே முறையாக குடிநீர் வினியோகம் செய்யாமல் மிகவும் காலதாமதமாகவும், மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதே சமயத்தில் அருகில் உள்ள வார்டு பகுதிக்கு முறையாக குடிநீர் வருவதாக குற்றம்சாட்டி 22-வது வார்டு மக்கள் தங்கள் பகுதிக்கு அதிகாரிகள் குடிநீர் வினியோகம் செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்

    -2-வது வார்டு உறுப்பினர் ராஜ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    -தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்

    அப்போது மூன்று நாட்களுக்கு ஒரு முறை நிச்சயமாக 3 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி பொறியாளர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
    • போலீசாரிடம் மனு அளித்தனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஒன்றியம் மேல்பாக்கம் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ரேசன் கடை உள்ளது.

    இந்த ரேசன் கடை அருகே உள்ள அரசு இடத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    அவர்கள் அப்பகுதியில் கற்களைக் கொட்டியும், கழிவு நீரை வெளியேற்றியும் ரேசன் கடைக்கு வரும் மக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வந்துள்ளனர்.

    இது குறித்து கிராம மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில் ரேசன் கடை அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

    இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் ரேசன் கடையை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ரேசன் கடையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வார்டு உறுப்பினர்களிடம் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் செந்தில்குமார், ஆறுமுகம், கிராமத் தலைவர் ஹேமச்சந்திரன் மற்றும் சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்றிரவு அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

    மேலும் ரேசன் கடையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் வலியுறுத்தி மனு அளித்தனர்.

    மனுவைப் பெற்றுக் கொண்ட போலீசார் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்களும், பெண்களும் கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சாதி சான்றிதழ் கேட்டு போராட்டம்
    • 2 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா கொரட்டி அருகே பஞ்சனம்பட்டி கிராமத்தில் குறிஞ்சி வட்டம் வசிப்பவர்கள் குறவன் சாதி சான்றிதழ் கேட்டு கொரட்டி வருவாய் அலுவலர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு 2 நாட்களில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி சாலை விரிவாக்க பணியை வேறு வழித்தடத்தில் அமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நில எடுப்பு தனி வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்து வந்தனர்.
    • சாலை விரிவாக்கத்திற்கான இறுதி விசாரணை அழைப்பாணை விடுத்த நிலையில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நில எடுப்பு தனி தாசில்தார் புகழேந்தி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம், பெரிய காவனம் பகுதியில் புது வாயல்-பழவேற்காடு சாலை 4 கிலோமீட்டர் தூரம் 4 வழி சாலையாக விரிவாக்க திட்ட பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சாலையில் பெரிய காவனம் ரெயில்வே கேட் முதல் சின்னக்காவனம் வரை சாலையின் இருபுறமும் 100-க்கு மேற்பட்ட வீடுகள் பழமைவாய்ந்த 5 கோயில்கள் அமைந்துள்ளது.

    சாலையின் விரிவாக்க பணிக்காக இவை அகற்றப்பட உள்ளன. இதற்கு அப்பகுதி மக்கள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி சாலை விரிவாக்க பணியை வேறு வழித்தடத்தில் அமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நில எடுப்பு தனி வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்து வந்தனர். இந்நிலையில் சாலை விரிவாக்கத்திற்கான இறுதி விசாரணை அழைப்பாணை விடுத்த நிலையில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நில எடுப்பு தனி தாசில்தார் புகழேந்தி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

    இதில் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம், பழமைவாய்ந்த கோவில்களை அகற்ற விடமாட்டோம் என்று பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வீட்டு மனைபட்டா வழங்க வலியுறுத்தல்
    • போலீசார் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு கலைந்து சென்றனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த நாராயணபுரம் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    ஆந்திரா மற்றும் தமிழ்நாடு எல்லை பகுதியில் அமைந்துள்ள ஜவ்வாது ராம சமுத்திரம் மலையை ஒட்டி மூளவட்டம், தனி காலனி, மதுகொள்ளி, மலை வட்டம், பனந்தோப்பு வட்டம், சந்தகாமணி, உள்ளிட்ட கிராமத்தை பொதுமக்கள் சுமார் 60 ஆண்டு காலமாக அப்பகுதியில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இதற்கு முன்பாக இப்பகுதி மக்கள் பணம் கட்டி வீட்டு ரசிது, மின் இணைப்பு ஆகியவற்றை பெற்றுள்ள னர். ஆனால் பகுதி மக்கள் தற்போது பணம் கட்டி வீட்டு ரசிது கேட்கும் போது ஊராட்சி செயலர் ஜெயசுதா அந்த இடம் ஆந்திர பகுதிக்கு சொந்தமானது எனவும் எனவே தற்போது அதற்கு வீட்டு வரி கொடுக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திடீரென முற்றுகை யிட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனிசாமி மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களுடைய பேச்சு வார்த்தை நடத்தி இது குறித்து அதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×